பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காவியப் பாவை



சங்க இலக்கியம்

சாற்றி வளர்ந்திடுவாய்-நம்
சங்க இலக்கியப் பெருமையெலா மிங்கு
—சாற்றி
காதலும் வீரமும் கண்ணெனக் கூறும்
கற்பவர் நெஞ்சினில் பெருமிதம் சேரும்
தீதெனும் அடிமைச் சிறுமைகள் மாறும்
தெளிவுடன் அறிவும் சிந்தனை கூரும்
—சாற்றி
சாதி சமயச் சழக்குகள் இல்லை
சகலரும் உறவினர் என்பதோர் சொல்லை
ஓதிய அறநூல் சங்கத்துச் செல்வம்
உயிரெனக் காப்பதால் பகையைநாம் வெல்வம்
—சாற்றி

21