பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காவியப் பாவை




விந்தையடா விந்தை

மாநிலத் தன்னில் கடத்திவரும்—விந்தை
மானிடர் செய்கையைச் சாற்றுகின்றேன்
ஏனிவர் இவ்வணம் ஆற்றுகின்றார்—என
எண்ணித் துணிந்துசொல் ஓர்முடிவு

செத்த பிணத்தைப் புதைத்து வைத்த—குழி
சென்றங்கு மீண்டுங் கிளறுகின்றார்
பித்தரைப் போலப் பிதற்றுகின்றார்—இனிப்
பேசாப் பிணத்தின்முன் பேசுகின்றார்

தோண்டி எடுத்திடும் மேனிதனில்—படி
தூசி துடைத்துடன் பூமுடித்து
வேண்டிய பூசை செலுத்துகின்றார்—இந்த
விந்தையை யாதென் றுரைத்திடுவேன்

23