பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை கட்டுதிற் கோர்துணி அற்றவனம்-கையில் காசு பணங்களும் அற்றவனும் திட்டி விரட்டினர் அன்னவனே-அவன் தேம்பிக் கிடப்பதைக் கண்டு கின்றேன் தங்க உடல்நலம் கொண்டவன் தான்-அவன் தங்க இடமின்றிச் சுற்றுகின்ருன் எங்கும் புறக்கணிப் பானதடா-சிங்க ஏறு வளங்குன்றிப் போனதடா! ஆவி உடல்வளம் அத்தனையும்-பெறும் ஆண்மகன் இப்படித் தேய்ந்திடவே பாவி மடம்படு மானிடர்கள்-நஞ்சு பாய்ச்சுதல் கண்டுளம் வெந்ததடா! செத்த மொழிக்கிங்கு சீர்வரிசை-ஒரு செம்மை பெருமொழிக் கேற்றமிங்கே பெற்ற மொழிக்கொரு காவலில்லே-என்ற பெற்றியை நெஞ்சம் நினைந்ததடா! 26