பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை அழுதிடும் பாலன் - பசியால் ஆவி தொலைந்தாலும் கழுவுவர் பாலால் - அந்தோ கல்லுருத் தேவுகளே ஓட்டைக் குடிசையுள்ளே - உணவின்றி ஒட்டி உலர்ந்த மகன் வேட்டியும் இல்லாமல் - அவனுறும் வேதனை தீராதோ? மாட்டினும் கீழாக - மனிதன் மாண்டிடும் தீயநிலை ஒட்டிட வேண்டுமம்மா - உண்மையை ஒர்ந்திட வேண்டுமம்மா