பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை முன்னையர் வாழ்வு [o] வாணிகம் செய்தநம் முன்னேயர் கண்டநல் வாழ்வினைக் கூறுவன் கேட்டிடுவீர் தோணிகள் ஓட்டினர் சூழ்கடல் சுற்றினர் குட்டினர் நம்புகழ் நாட்டினரே ஆழ்கடல் ஆயினும் சூழ்புயல் ஆயினும் அஞ்சில ராகிய நெஞ்சினராய்க் கீழ்கடல் மேல்கடல் யாவினும் ஓடினர் கிட்டும் நிதிக்குவை விஞ்சினரே தெற்குக் கடல்தனில் கொற்கைத் துறைதனில் தேடிக் கிடைத்தகன் முத்துக்களே விற்கத் திசைதொறும் சென்றனர் பொற்குவை வேண்டிய மட்டுங் குவித்தனரே