பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை இன்னும் வரக்காணேன் ! Π இந்நேரமாகியும் காணேனே - காலையில் எழுந்திருந்து சென்றவர் -இந்நேரம் தென்னே மர நிழல்வந்து தெருவாயிற் படிஒரம் சேர்ந்ததே ஒன்பது மணிச்சங்கும் ஒய்ந்ததே -இந்நேரம் எக்காலும் ஆர்வமாய் உண்பார் என்றெண்ணியே என்நாதன் மனம் மகிழ எழுந்தோடி நான்செய்த சிக்கான நூல்போன்ற இடியப்பம் வீணுகச் சில்லிட்டுப் போகுதே! நெஞ்சமும் நோகுதே ! -இந்நேரம் வரும்வழியில் எவரேனும் வாய்கிளறி விட்டாரோ வம்பெதற்கோ அரசாங்கப் பேச்சைத்தான் தொட்டாரோ? தரும்சுவையில் மேலான தமிழென்ருல் உயிராச்சே ! தாய்மொழியின் நிலையைத்தான் உரையாடி நின்ருரோ ? -இங்கேரம் 62