பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை நாட்டைக் கெடுக்கும் நயவஞ்சப் ப்ோக்குக்குச் சாட்டை அடிகொடுக்கச் சார்ந்தவனே கண்வளராய் நெஞ்சொற் சிலம்பிருக்கச் செம்மைக் குறளிருக்க அஞ்சற் கிடமில்லை ஐயன்மார் தேடிவைத்த சங்கத்துச் செல்வங்கள் சாந்துணையும் போதுமடா வங்கத்துச் சென்ருேடி வாணிகம் செய்வதுபோல் பாரெல்லாம் சென்று பரப்பிடுவாய் நின்மொழியை ஊரெல்லாம் ஓடி ஒலிஎழுப்ப வேண்டுமடா ஆண்ட இனத்தாரை ஆட்சிக்குக் க்ொண்டுவர வேண்டு மெனக்கருதும் விழைவுடனே நீவாழ்வாய் அறம்நாட்ட வந்தவனே ஆணவம்சேர் மாற்ருர்க்கு மறம்காட்ட வந்தவனே மாமணியே கண்வளராய் 84