பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை - பாரதியின் குரல் [I] விதிகள் எங்கணும் என்புகழே பாடி வெற்றி முழக்கிடும் மானிடரே சாதிகள் இன்னும் தொலைத்திரோ - பொய்மைச் சாத்திரம் ஏதும் விடுத்திரோ ? ஆடியும் பாடியும் கூத்தடிப்பீர் - என்றன் ஆர்வமெ லாம்எங்கோ போட்டழித்தீர் பாடிய என்னுடைப் பாக்களிலே - அந்தோ பற்பல ஊனங்கள் ஆக்கிவிட்டீர் ! தன்னலம் ஒன்றையே மேம்படுத்த - என்பால் சாகசக் காதலைக் காட்டுகிறீர் என்னுளம் யாதென எண்ணுகினீர் - உமக் கேற்பவே என்னைச் சுழற்றுகிறீர் ! 89

  • т. шт. 6