பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 சிறிது நேரத்தில் கணவனே இழந்த கண்ணகி, மன்னன் அரண்மனே அடைந்து, தன் கணவன் கள்வ னல்லன் என்பதை கிலேகாட்டிய செய்தி நகரெங்கும் பரவியது. அரசன் நெடுஞ்செழியன் தான் நீதி தவறிய நிலையுணர்ந்து அரியாசனத்திலேயே உயிர் நீத்தான் என்று ஊராரெல்லாம் பேசிக் கொண்டனர். அன்றிர வில் சாத்தனர் பலர் வந்து கூடும் வெள்ளியம்பலத்தில் சென்று தங்கினர். எங்குப் பார்த்தாலும் கண்ணகியைப் பற்றிய பேச்சே கடந்துகொண்டிருந்தது. அவ் வெள்ளியம்பலத்தில் ஊரவரும் அயலவரும் ஒதுங்கி நின்றனர். அங் நேர த்தில் வீரமும் சோகமும் ஒருங்கு உருவெடுத்தாற் போன்ற கண்ணகி அவ் வெள்ளியம் பலத்தின் முன்னர் வந்து கின்ருள். மதுரைககரம் இப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அப்பொழுது மதுராபதி என்னும் தெய்வம், கண்ணகியின் முன்னர்த் தோன்றி அவளது முற்பிறப்பின் வரலாற்றை விளங்க உரைத்தது. அவள் கணவன் கொலேயுண்டது முன் செய்த தீவினையால் என்பதைத் தெளிவுறுத்தியது. சேரநாட்டிற்குச் செல்லுதல் இவற்றை எல்லாம் நேரில் கண்ட சீத்தலைச்சாத்த ர்ை மதுரைமாநகர் தீக்கு இரையாயினமையால் வஞ்சி நகரை நோக்கி வழிநடந்தார். வஞ்சியைச் சார்ந்த சாத்தனர், செங்குட்டுவன் மலைவளம் காணப் புறப் பட்ட செய்தி உணர்ந்தார். அவரும் செங்குட்டுவ லுடன் ஒருங்கு புறப்பட்டுப் பேரியாற்றங் கரையை அடைந்தார். ஆங்கிருந்த மணல்மேட்டில் மன்னர் பெரு மானகிய செங்குட்டுவளுேடும் இளங்கோவடிகளோடும் இன்பமாக உரையாடி இருந்தார். அவ் வேளையில் சேர