பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 ) கிராமப் புறப்பாட்டாளிகளை நோக்கி

கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறலாம். விவசாயிகளின் விளை பொருள்களுக்குக் கட்டுபடியாகும் விலை என்பது நடுத் தர விவசாயிகளின் மிக முக்கியமான வர்க்க நலன் என்று கூறலாம்.

இதில் விவசாயிகளின் நலனுக்கும் இந்திய முதலாளித்துவ முறைக்கும் இடையில் உள்ளமு rண்பாடு இன்றைய இந்திய சமுதாயத்தின் மிக முக்கியமான முரண்பாடுகளில் ஒன்றாக இந்திய முதலாளிகளுக்கும் இந்திய மக்களுக்குமிடையிலான முரண்பாட்டின் முக்கிய பகுதியாக வெளிப்பட்டு வருகிறது. இதில் நடுத்தர விவசாயிகளின் பங்கு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.

நடுத்தர விவசாயிகளின் குடும்பங்களில் உள்ளவர்கள்பெரும் பாலும் ஒரளவு படித் தவர்களாகவும், நவீன உற்பத்தி முறை களில் தொடர்பு கொண்டவர்களாகவும், அரசாங்கநிர்வாகத் துடன் தொடர்பு கொண்டவர்களாகவும் கூட்டுறவு பஞ்சாயத்து முதலிய அமைப்புகளுடன் மிகவும் நெருக்கம் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.

இந்திய ஜனநாயகப்புரட்சியில் இவர்களுடைய பங்கு முக்கிய இடம் பெறுகிறது. விவசாயிகளின் இயக்கத்திற்கு நல்ல செயல் வீரர்களைக் கொடுக்கும் சக்தியைப் பெற்றிருக் கிறது.

இந்தப் பகுதி விவசாயிகளிடத்தில், இந்திய விவசாய உற் பத்தியின் முக்கிய பிரச்சனைகளைப்பற்றிய உண்மையான ஞானம் அதிகப்படவேண்டும். முதலாளித்துவ சுரண்டல் முறையின் உண்மைவடிவம் அவர்களுக்குத் தெளிவுபட

வேண்டும். புரட்சிகர ஜனநாயக உணர்வுநிலை அவர் களிடம் வளர வேண்டும்.

6

பணக்கார விவசாயிகள் :

பணக்கார விவசாயிகள் என்பவர்கள், கிராமப்புறங்களில் உள்ள வசதியான விவசாயிகளாவர். தங்கள் குடும்பத் தேவைக்கும் சற்று அதிகமாகவே நிலஉடமை உள்ளவர்கள், ஏர் மாடு கால்நடைகள் உடையவர்கள், பெரும்பாலும் தங்கள் தேவைக்கு மேல் சற்று உபரியாகவே உற்பத்தி செய் பவர்கள்; தங்கள் விவசாயத்தைத் தாங்களே நேரில் பார்வை யிட்டு விவசாயத்தைச் செய்பவர்கள், தங்கள் விவசாயத் தொழில் நிர்வாகத்தை தாங்களே நடத்துபவர்கள், தங்கள் விவசாய வேலைகளுக்கு விவசாயத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி வேலை வாங்குபவர்கள்.

விவசாயத் தொழிலாளர்களின் கூலி உழைப்பின்மூலமாகவே தங்கள் விவசாய வேலைகளைச் செய்து வருபவர்கள்.