212 ) கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி
பத்திரிகை நடத்தினார். தீண்டாமையைப் போக்கப் பாடு பட்டார்.
பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்க ளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எதிர்த்து, அவர் களுன்ட்ய மனித உரிமைகளுக்காகக் கடுமையாகப்போராடி t mtri.
அடித்தட்டு மக்களின் அரசியல் விடுதலைக்காகவும்-இபாரு ள்ாதார உயர்வுக்காகவும், சமூக சமநீதிக்காகவும் இந்தியக் கம்யூனிஸ்ட்இயக்கம் தொடக்கம்முதல் தீவிரமாகப் G3 l_unt ITIT டியது. சாதிப் இழிவுகளுக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்கும் பா,ே ப்ாடுகளுக்கும் எதிராகத் தொழில்ர்ள்ர்களையும் விவசாயி களையும், முற்போக்கு எண்ணங்களைக் கொண்ட படிப் பாளிகளையும் ஒன்று திரட்டியது.
பாரதி தனது கவிதைகளில், சாதிப்பாகுபாடுகளை திவிர மாகச் சாடினார், சாதி மதங்களைப் பா ரோம் என்றார். எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஒர் இனம் , எல்லோரும் இந்திய மக்கள், எல்லோரும் இந்நாட்டு மன்னர் . என்று பாரதி பாடினாா.
பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே, வெள்ளைப் பரங்கியைத்துரையென்ற காலமும் போச்சே என்றும் எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு நாம் எல்லோரும் சம மென்பது உறுதியாச்சு என்றும்.
எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே பொய்யும் ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே என்றும் பாரதி சுதந்திரப் பள்ளுப்பாட்டு பாடினார்
சாதிகள் இல்லையடி பாப்பா- குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம் என்று பாப்பாப்பாட்டு பாடினார் பாரதி.
நான்கு வகுப்பும் இங்கொன்றே- இந்த
நான் கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே- செத்து வீழ்ந்திடும் மானிடச்சாதி.
சாதிக் கொடுமைகள் வேண்டாம்- அன்பு
தன்னில் செழித்திடும் வையம்
ஆதரவுற்றிங்கு வாழ்வோம்-தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்
அறிவை வளர்த்திட வேண்டும்- மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்
றிெயரை மேம்படச் செய்தால்-பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்