பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரிக்கெட் ஆட்டத்தின் கதை

41


ஆட்டம் இந்தியாவில் வளர்ந்திட, பேருதவி புரிந்திருக்கும் அமைப்பு என்றும் புகழப்பட்டிருக்கிறது.

இந்த மத அபிமானத்தைத் தழுவி, இந்துக்களும் ஒரு கிரிக்கெட் கிளப்பைத் தொடங்கினர். அது 1886ம் ஆண்டு நடைபெற்றதாகும். அதற்கு முன்னதாக 1883ம் ஆண்டு முகமதியர்கள் ஒரு கிரிக்கெட் கிளப்பை ஆரம்பித்தாள்கள் என்று வரலாறு கூறுகிறது.

மனத்தாலும் மதத்தாலும் ஆட்டத்திற்கு மாபெரும் வரவேற்பு தொடர்ந்து மக்களிடையே இருந்ததால், ஆட்டம் இந்தியாவில் மகோன்னத நிலையை எய்தியது. ஏற்கனவே, பார்சியர்களால் ஆட்டம் சிறப்புற வளர்ச்சி பெற்றிருந்தது என்று குறித்திருந்தோம். அதையும் இங்கே காண்போம்.

பார்சியர் குழுவானது 1886ம் ஆண்டு இங்கிலாந்துக்கு விஜயம் செய்து விளையாட்டில் பங்குகொண்டது. அவர்கள் மொத்தம் 28 முறை போட்டிகளில் பங்கு பெற்றார்கள். அதில் 19 போட்டிகளில் தோற்றாலும், பயணம் பயனுள்ளதாகவும், அனுபவம் நிறைந்ததாகவும், ஆட்டக்காரர்களுக்கு உற்சாகம் ஊட்டுவதாகவும் அமைந்திருக்கிறது.

அதுபோலவே இங்கிலாந்தில் இருந்து ஒரு குழுவும் 1889-90 ம் ஆண்டுகளில் இந்தியாவுக்கு விஜயம் செய்து, ஆடிய 13 போட்டிகளில் பார்சியர் குழுவிடம், ஒரு முறை தோற்றது என்றால், இந்திய ஆட்டக்காரர்களின் ஆட்டவளர்ச்சியின் வேகத்தை நம்மால் காண முடிகிறதல்லவா!

ஆனால், இந்தியாவின் சார்பாக முதன்முதலாக ஒரு குழு இங்கிலாந்துக்கு 1911ம் ஆண்டுதான் அனுப்பப்பட்டது. இவ்வாறு நாடுகளுக்கிடையே கலாச்சார குழுவினர் சென்று பரிவர்த்தனை செய்து கொள்வது போல, கிரிக்கெட் குழுக்களை அனுப்பி, பல நாடுகள் தங்களது நேச உறவையும், ஆண்மைப் பெருக்கையும் வெளிப்படுத்தி அன்பு பாராட்டிக் கொண்டன.