பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரிக்கெட் ஆட்டத்தின் கதை

91


இந்த டெஸ்ட் போட்டி ஆட்டமானது முதன் முதலாக இங்கிலாந்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் 1877ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. அந்தப் போட்டி அந்த ஆண்டு மார்ச்சு மாதம் 15-17ந் தேதி வரை, அதாவது மூன்று நாட்கள் நடைபெற்றன. இதுவே முதல் டெஸ்ட் போட்டியாகும்.

டெஸ்ட் போட்டி ஆட்டம் மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்தப் பழக்கம் 1930ம் ஆண்டு வரை நீடித்தது. பிறகு போட்டிகள் நான்கு நாட்கள் நடைபெற்றன. இது 1947ம் ஆண்டுவரை நீடித்தது. பின்னர் 1948ம் ஆண்டில், டெஸ்ட் போட்டிகள் 5 நாட்கள் வரை ஆடலாம் என்று நாட்களை அதிகப்படுத்தினர். அதுவே இன்று வரை நின்று நிலவி வருகிறது.

இந்தியா முதன் முதலாக இங்கிலாந்துடன் டெஸ்ட் போட்டியை 1932ம் ஆண்டு, இங்கிலாந்திலுள்ள ஒவல் மைதானத்தில் ஆடியது.

இலங்கையுடன் முதல் போட்டியை டெல்லி நகரில் 1932-33ம் ஆண்டில் தொடங்கியது.

ஆஸ்திரேலியாவுடன் முதல் டெஸ்ட் போட்டியை இந்தியா 1947-48ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஆடியது.

இந்தியா மேற்கிந்தியத் தீவினருடன் டெஸ்ட் போட்டியை, 1948-49ம் ஆண்டு இந்தியாவில் ஆடினர்.

இந்தியாவும் நியூசிலாந்தும் 1955-56ம் ஆண்டு தங்களது முதல் டெஸ்ட் போட்டிகளை இந்தியாவில் ஆடினர்.

டெஸ்ட் போட்டியை முதன் முதலாக டெலிவிஷனில் காட்டி, இங்கிலாந்து நாடு பெரும் புகழை ஈட்டிக்கொண்டது.

இவ்வாறாக, இன்றைய நாளில் கிரிக்கெட் ஆட்டம், உலகப்புகழ்பெற்ற ஆட்டமாக, கோடிக்கணக்கான ரசிகப் பெருமக்களைத் தன்னகத்தே கொண்டு, கோலாகலமான குழ்நிலையில் வளர்ந்து வருகிறது. மக்களை மகிழ்வித்து வருகிறது.

இன்றைய 'வளர்ச்சியைப் பார்த்தால்', கிரிக்கெட் ஆட்டத்தின் தோற்றத்திற்குரிய ஓர் எண்ணம், கடவுளின் 'என்ணமே' என்று ஒரு ரசிகள் சொல்கிறார் என்றால்' அது உண்மை என்றே எண்ணத் தோன்றுகிறது.