பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


அப்பொழுதுதான் ஒலிம்பிக் அதிகாரிகளுக்கு உணர்வு வந்ததுபோலும், பெண்களுக்கும் போட்டியில் இவ்வளவு ஆர்வமா என்று தெரிந்து கொண்டனர். கடுமையான விதிகளைத் தளர்த்திட விரும்பினர். பெண்களும் பந்தய மைதானத்திற்குள் வரலாம் என்று அனுமதி அளித்தனர். பின்னர் பெண்கள் பந்தயத்தில் கலந்து கொண்ட வரலாறும் தொடர்ந்தது.

இவ்வாறு உயிரையும் திரணமாக மதித்து, ஒலிம்பிக் விதிகளையே மீறி புரட்சியையும் புது மாற்றத்தையும் அளித்த பிரனிஸ், தன் தந்தை தயாகரசுக்கு மேலும் புகழினையே அளித்திருக்கிறாள்.

ஆரம்ப காலத்தில், பெண் குலத்திலிருந்து ஒரே ஒரு பெண்ணை மட்டும் பார்க்க அனுமதித்திருந்தனர். அவள் கோயில் தலைமைப் பூசாரியான பிரிஸ்டஸ் ஆப் டெமிடர் (Priestesc of Demeter). அதன் பின் ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்து கொள்கின்ற வீரனுடைய தாய் தந்தை, மகன் என்பவர்கள் மட்டுமே வரலாம் என்று அனுமதித்திருந்தனர்.

வருபவர்கள் ஆணா பெண்ணா என்பதை அறிய பந்தயத்தில் போட்டியிடும் வீரர்களைப் போலவே, பயிற்சியாளர்களும் பிறந்தமேனியுடனே வரவேண்டும் என்ற கடுமையான வழியையும் ஏற்படுத்தினார்கள்.

இவ்வாறு தயாகரஸ் பரம்பரையினர், ஒலிம்பிக் பந்தயங்களில் தோன்றி, ஒரு புது சகாப்தத்தையும் பெரும் புரட்சியையும் உண்டு பண்ணிவிட்டார்கள். தயாகரஸ் தனி வரம்பெற்ற வீரன் போலவே கிரேக்க வரலாற்றில் கீர்த்தியுடன் இன்றும் விளங்குகிறான். ஏனெனில்.

தக்கார் தகவிலார் என்பார் அவரவர்தம்
எச்சத்தார் காணப்படும் என்பது பொய்யா மொழியின்
பொன்மொழியல்லவா!