பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரேக்க ஒலம்பிக் பந்தயங்கள்

15


மனிதன் தன் இனத்தை விருத்தி செய்தான், மக்கள் உற்பத்தி பெருகுகிறது. மக்களின் சத்தம். அவர்கள் போட்ட கூக்குரல் எல்லாம், கடவுள்களைத் தொந்தரவு செய்தன. அவர்களின் சத்தத்தைக் குறைக்க, கடவுள்கள் எத்தனையோ வழிகளில் முயற்சித்தாலும், அவர்களால் முடியவில்லை.

அதனால், மக்களை அழித்திட, பஞ்சங்கள், பிளேக் நோய்கள் போன்ற பலவற்றை அனுப்பி வைத்தனர் அதில் அகப்பட்டு, மனிதர்கள் அழிந்தாலும், ஆத்திரமடைந்த கடவுள்களுக்கு அந்தக் காட்சியும், அவல நிகழ்ச்சியும் போதவில்லை. இன்னும் மோசமான சூழ்நிலைகளை உண்டாக்கினர். ஆனாலும், அவற்றிலிருந்துதப்பிப்பிழைக்க, தூய நீரின் கடவுளாக விளங்கிய அன்கி எனும் கடவுளின் மூலம் செய்தி அனுப்பினர்.