பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்

31


போர்க்காலத்தில் அன்றைய தமிழ் வீரக்குடிமக்கள், கொற்றவை என்கிற காளி தெய்வத்தின் முன்னே வேண்டிக்கொள்வார்களாம். போரில் வெற்றி பெற்றுத் திரும்பினால், தாய் நாட்டுக்கு வென்ற பெருமை வந்து விட்டால், திரும்பவும் இந்த கோயில் சன்னதிக்கு வந்து, தங்களையே உயிர்ப்பலி தருவதாக வேண்டிக் கொள்வார்களாம்.

அதேபோல், வெற்றிபெற்றுவிட்டால், கொற்றவைக்கு விழா எடுத்து, அவள் சன்னதியின் முன்னே, வீரர்கள் மேளம் கொட்டி, பாட்டிசைத்து, உக்ரவ தாண்டவம் ஆடி, அந்த உச்சக்கட்டத்தில், ஒரு கையில் பிடித்திருக்கும் கத்தியைக் கொண்டு, மற்றொருகையில்தலைக் குடுமியைப் பற்றிய படி, வெட்டிக்கொள்வார்களாம்.

வேகமாக ஆடிக்கொண்டிருக்கும்போது, கழுத்தை வெட்டிக் கொண்டால், தலையில்லாத முண்டமானது அதே வேகத்தில் ஆடிக் கொண்டிருந்தபடியே இருக்கும். அப்படி பல வீரர்கள் தங்களைப் பலி கொடுத்துக் கொண்டதால், ஏற்பட்ட காட்சியானது, பயங்கரமாக இருக்கும் என்றெல்லாம், நம்மவர் வீரம் பற்றிப் பேசிக்களிப்பார்கள்.

பக்தி என்கிறபோதும், படையல் என்கிற போதும், பலி என்கிறபோதும், எந்தநாடாக இருந்தாலும், நடப்பில் ஒன்றாக இருப்பதைக் குறிக்கவே, இந்தக் கருத்தை, இங்கே குறிப்பிட்டோம்.

வெட்டவெளியில் நம் நாட்டவர்கள், சிலையமைத்துக் கும்பிட்டார்கள் என்றால், ஆதிகால இஸ்ரேல் நாட்டு வரலாறானது, அக்கால மக்கள் முகாம் அமைத்து (Tent) திருவிழா கொண்டாடினார்கள் என்று கூறுகிறது.

எதை மக்கள் இறைவனிடமிருந்து எதிர்ப்பார்த்தார்களோ, அந்தப் பொருளையே, இறைவனுக்கு