பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


அர்ப்பணிக்கிற பழக்கமும், எல்லா நாட்டு மக்களிடையேயும் இருந்து வந்திருக்கிறது.

தண்ணீர் ஊற்றி, இறைவனுக்குப் படைத்து, விழா கொண்டாடிய பழக்கம், நல்ல மழையை எதிர்ப்பார்த்து செய்கிற விழாவாக இருந்தது என்பதை ஒரு வரலாற்றாசிரியர் குறிப்பிட்டுக் காட்டுகின்றார்.

கழுதைகளுக்குக் கல்யாணம் செய்து வைக்கின்ற பழக்கம், தமிழ்நாட்டு கிராம மக்களிடையே இன்னும் இருந்து வருகிறது. இசைக் கச்சேரி செய்வதும், நல்ல மழையை எதிர்ப்பார்த்தே செய்கின்றார்கள்.

ஆக, மதப் பழக்கத்தில், மிகுதியாக இடம் பெற்றிருந்த மரபுகள் மக்களைக் கவர்ந்த விழாக்கள், காணிக்கைகள், படையல்கள், விழாச் சேவைகள், பிரார்த்தனை, உண்ணா நோன்பு என்பவைகளாக விரிவடைந்து கொண்டே வந்திருக்கின்றன.

வீதிக்கு வந்த விஷயங்கள்

குடும்ப வாழ்க்கையும் மத விஷயங்களும், ஒன்றுக் கொன்று இணைந்து, இணைபிரியாமலே, ஆரம்பம் முதல் இருந்து வந்திருக்கின்றன. மத விவகாரங்களும், ஒரு சமுதாய அமைப்பு போலவே, மக்கள் வாழ்வுடன், பின்னிப் பிணைந்தே கிடந்தன.

எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளையும் தாங்கள் சார்ந்துள்ள மதத்தையே பின்பற்றுமாறு அறிவுறுத்தினர். வாழ வைத்தனர். வழிநடத்தினர். அந்த வாழ்வையே கட்டாயமாக்கினர். அதற்காக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு, மதசம்பந்தமான கருத்துக்களைக் கூறியதுடன், அதிசயம் விளைவிக்கத் தக்க கதைகளையும் கூறிவந்தனர்.