பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


அதிகாரிகள் ஆனால், அவன் ஆற்றலையும் வெற்றிபெறும் விவேகத்தையும் கண்ட அந்நகர மக்கள், அவனுக்கு சிலை ஒன்றைச் செய்து வைத்திருந்தார்கள்.

அந்தச் சிலையைக் கண்டு, ஆத்திரமடைந்த ஒரு வீரன், ஏற்கனவே தியாஜனிசிடம் தோற்றவன் தான். அவனுக்கா சிலை என்று ஆத்திரம் கொண்டு இரவிலே சென்று, அச்சிலையை உதைத்து உடைத்தான். உடைந்துபோன அச்சிலை, அவன்மீதே விழ, அவன் அதே இடத்திலே நசுங்கி இறந்து போனான். அதைக் கண்டு, சிலையான பிறகும் கூட, தன் எதிரியைக் கொன்று வீழ்த்தும் ஆற்றல் தியாஜனிசிடம் தான் உண்டு. என்று கூறி அந்நகர மக்கள் மகிழ்ந்தனராம். எப்படி கதை!

இந்தப் பயங்கரப் போட்டியிலே, இதற்குமுன் நடந்திருந்த ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி வீரனாகத் திகழ்ந்த அரேசியன் என்பவன். இந்தப் பந்தயத்திலும் கலந்து கொண்டு, மீண்டும் வெற்றி பெறத் துடித்துக் கொண்டிருந்தான். போட்டி ஆரம்பமாயிற்று. இருவரும் வீராவேசத்தோடும், இரைமீது பாய்கின்ற புலிபோலும் போரிட்டனர்.

அரேசியன் தான் பலவானாயிற்றே! ஆகவே, அவன் தன் எதிரியின் காலைப் பிடித்துக் கடுமையாக முறுக்கிக் கொண்டிருந்தான். எதிரியோ, அவன் கழுத்தைப் பிடித்து அழுத்தி நெறித்துக்கொண்டிருந்தான். அந்தப்பிடி இறுகியதன் காரணமாக, அரேசியன் அதே இடத்தில் இறந்துபோனான். அதே சமயத்தில், அவனது கைகள் எதிரியின் காலை வலிமையாகப் பிடித்து முறுக்கியதால், வலி பொறுக்க மாட்டாத எதிரி, தன் கையை உயரே தூக்கித் தன் தோல்வியை ஒப்புக் கொண்டான். எனவே, இறந்தவன் போட்டியில் வெற்றி பெற்றான் என்று அதிகாரிகள் தீர்ப்புக் கூறினர். எப்படி இருக்கிறது முடிவு?