பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரேக்க ஒலிமபிக் பந்தயங்கள்

79


இவ்வாறு மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்ற ஒரு வீரனுக்குப் பரிசு மட்டும் அல்ல. சிறப்புப் பரிசும் தந்து கெளரவித்தார்கள். அதுதான் அவனைப் போன்ற சிலை சமைத்துப் பெருமைப் படுத்தியது.

இத்தகைய பெருமை மிக்க விளையாட்டுக்களை நடத்திய கிரேக்க நாடு, ரோமானியர்கள் கையிலே பிடிபட்டுப் போனவுடன் புகழிலே மட்டும் கீழ் நிலையடையவில்லை. தூய கலப்பற்ற கிரேக்கர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். என்று காக்கப்பட்டு வந்த கடுமையான விதி, தூள் தூளாகப் பொடிபட்டுப் போக தூக்கி எறியப்படுவதையும், மணியான மரபு மண்ணாகிப் போவதையும் கண்டு சகித்துக்கொண்டு மாற்றார்களையும் போட்டிக் களத்திற்குள் புகவிட்டு இழிநிலைக்கு ஆளாயினர். கிரேக்கர்களுக்கு மட்டுமே உரிமையாக இருந்த பந்தயம், மெசபடோமியா, ரோம் போன்ற வேற்று நாட்டு வீரர்களுக்கும் பொதுவாகிப் போனது.

அடிப்படை விதியே ஆட்டம் காணத் தொடங்கியபோது, அங்குள்ள மக்களும் ஆர்வமிழக்கத் தொடங்கினர் விளையாட்டுக்களில் முன்பிருந்த ஆர்வம் மட்டுமல்ல. மத சம்பந்தமான மரபும் புனிதத் தன்மையும் வீழத் தொடங்கின. நாடும் வலிமையை இழக்கத் தொடங்கியது. உள் நாட்டு பாசி படியலாயிற்று. பந்தயங்களில் கலந்து கொள்ளக் கூடிய விதிமுறைகளைப் பற்றியே, போட்டியாளர்கள் கொஞ்சம் யோசிக்கத் தொடங்கினர். அதாவது மாறுபட்ட முறையில்!

போட்டியில் பங்கு பெற பத்து மாதங்கள் பயிற்சி செய்ய வேண்டும் என்பது அந்த விதி! அவ்வாறு பத்து மாதங்கள் பயிற்சி செய்யவேண்டும் என்றால், அவனால் வேறு எந்த வேலையும் செய்யமுடியாது. அதற்குத் தேவையான பொருளாதார வசதியும் வேண்டும், பயிற்சிக்குப்பிறகு தேவைப்படுகின்ற ஓய்வைப் பெறுகின்ற நலமார்ந்த குடும்பச்