பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94



12. கல்வி நிலை

ஏதென்ஸ் மக்களின் சிறுவர்கள் எழுதவும் படிக்கவும் அறிந்திருக்க வேண்டுமென்பதை அரசாங்கம் எதிர்பார்த்து வந்தது. ஆனால், அதற்கு ஆவன செய்வதற்கு அவ்வளவு முனைந்து பாடுபட்டிலது. ஆண்கள் தாம் படிக்க வேண்டும் என்றும், பெண் கல்வி அத்துணை வேண்டற்பாலதன்று என்றும் எண்ணும் கொள்கையும் இவர்களிடையே நிலைத்திருந்தது. இஃது அவர்களது பிற்போக்கான எண்ணத்தைக் காட்டுகிறது. கல்வி இருபாலார்க்கும் பொதுவானது என்பதைச் சிந்தித்திலர். இதில் நம் தமிழ் நாடு முன்னணியில் இருந்தது. ஆண்களைப் போலவே பெண்களும் ஏற்றந் தாழ்வின்றிக் கல்வி கற்று அறிவுடையராய் இருந்தனர் என்பதைச் சங்க நூல்களிலும், இடைப்பட்ட காலத்து நூல்களிலும் நன்கு காணலாம்.

குடியரசு நாடாக ஏதென்ஸ் இருந்தும், கல்விக்காக இவ்வளவு அசட்டையாக இருந்தது சிறிது வருந்தத்தக்கதுதான். நாளடைவில் ஏதென்ஸ் நகரச் சிறுவர்கள் நாட்டுக் குடிமக்கள் ஆவர் என்பதை அரசியலார் சிறிதும் உணராதிருந்தனர். பெற்றோர்களே தம் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தைக் குறித்துக் கவலைகொள்ள வேண்டியிருந்தது. பிள்ளைகளிடமிருந்து ஆசிரியன்மார் பெற்ற ஊதியம் மிக மிகச் சிறிதே ஆகும். அந்தச் சிறு தொகையை வசூலிப்பதற்கும் கணக்காயர் பெரிதும் வருந்தியே பெறவேண்டிய நிலை இருந்தது. இதனை நோக்கத் தமிழ்நாடு நனி சிறந்ததாகும். தமிழ்நாடு,