பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102


நாளடைவில் உரோமா புரியும் (Rome) தன் உச்சநிலையை அடைய ஆரம்பித்தது. தானும் தன் இராச்சியத்தைப் பரப்பிக் கிரேக்கர்களோடு உறவு கொண்டு கலையறிவு, நாகரிகம், உணர்சி முதலியவற்றில் முன்னேறலாயிற்று. இவ்வாறாக உரோமாபுரியின் மக்கள் கிரேக்கரின் முறைகளை அப்படியே பின்பற்றினர் என்னலாம். இதன்பின் ஐரோப்பிய சாம்ராச்சியத்திலும் கிரேக்க நாகரிகம் பரவலாயிற்று. உலகத்தின் மூலமுடுக்குகளில் எல்லாம் இந்தக் கிரேக்க நாகரிகமே பரவலாயிற்று.

பதினாறாம் நூற்றாண்டில் கிரேக்கரின் கலைகளைப் படித்து மறுமலர்ச்சி அறிவைப் பெருக்க மக்கள் பெரிதும் முனைந்து நின்றனர்.

பொதுவாக, இவர்கள் நாம் இக்காலத்தில் வாழும் வாழ்க்கையைவிட நல்ல முறையில் மகிழ்ச்சியோடும் உயர்ந்த எண்ணங்களோடும், சுறுசுறுப்பான உணர்ச்சியுடனும் வாழ்ந்து வந்தனர், என்பதில் ஐயமில்லை. நாமும் நம் பண்டைப் பெருமைகளையுணர்ந்து அம்முறையில் வாழ்ந்து நலனுற முயல்வேனமாக.