பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2. அரசியல் அமைப்புக்கள்

தலைநகர்த் தோற்றம்

ஒரு நாட்டின் அரசியல் முறையையும், மக்கள் அதில் ஈடுபட்டுள்ள நிலையையும் அந்நாடு அமைந்துள்ள இயற்கை அமைப்பினின்று அறுதியிட்டு உறுதியாகக் கூறலாம். இவ்விதிக்குப் பழங்கால மக்களான கிரேக்கர்கள் விலக்கானவர்களல்லர். கிரீஸ் தேசம் பெரிதும் மலைகள் நிறைந்த பிரதேசமாகும். அம்மலைகளில் அன்னாசி மரங்கள், ஒக்ஸ் மரங்கள் அடர்ந்திருந்தன. சரிவுகள் யாவும் அடர்ந்த காடுகள் நிறைந்தனவாகக் காணப்பட்டன. மலைகளுக்கிடையில் பெரிய பெரிய செழிப்பான பள்ளத்தாக்குகளும் இருந்தன. இந்தப் பள்ளத்தாக்குகளில்தான் வடதிசையினின்றும் வந்த கிரேக்கர்கள் முதல் வந்து தங்கினர். அதன்பின் சில நூற்றாண்டுகள்வரை மலர்களும் கனிகளும் நிறைந்த கிராமங்களில் வாழ்ந்து வரலாயினர். இவர்கள் வாழ்ந்த கிராமங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பின்றிச் சேய்மையில் இருந்தன. இவர்கள் ஒருவர்க்கொருவர் சேய்மையில் உறைந்தார்களானாலும், சமயம், சடங்குகள், வாணிபத்தொடர்புகள், அரசியல் தொடர்புகளில் எதிரிகளை எதிர்க்கும் காலங்கள் ஆகிய நேரங்களில் மட்டும் யாவரும் ஒன்று பட்டுப் பொது முறையில் செயற்பாலனவற்றைச் செய்து கொண்டனர்.

“பொன்னுந் துகிரும் முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்
இடைபடச் சேய ஆயினும் தொடைபுணர்ந்து