பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

சட்ட முறைகள்

எதினிய மக்கள், தங்கள் மக்கள் இனத்துள் ஒருவர் போலீஸ்காரனாக இருந்துகொண்டு தம் இனத்தவரை அடக்கி ஆள்வதை அறவே வெறுத்தனர். அதற்காகச் சிதியன் மரபைச் சேர்ந்த வில் வீரரை அழைத்து, அவர்களைக்கொண்டு நாட்டில் குழப்பம் நேராதிருக்கப் பார்த்து வந்தனர். நீதித் தலத்தில் ஆட்சி முறையிலும், குற்றத்திற்கு ஆளானவர்களைத் தண்டித்தற்காகச் சிரமம் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். சமுதாயத்தில், திருட்டு, கொலை, நம்பிக்கை மோசம் முதலான கொடுமைகளை ஒருவர் செய்தால் அவற்றின் பொருட்டு அரசியலார் அதற்காக முன்வந்து தீர்ப்புத் தண்டனை கொடுக்க முன் வர மாட்டார். அவற்றைப் பொதுமக்களே தமக்குள் கூடித் தண்டிக்க வேண்டிய முறையில் குற்றத்திற்குரியவரைத் தண்டித்து வந்தனர். இந்த முறைகள் நம் நாட்டுப் பஞ்சாயத்து முறை போன்றவை என்னலாம். இதற்குச் சான்று காண விழைவார், ஆளுடைய நம்பிகள் வழக்கு திருவெண்ணெய் நல்லூர் வேதம் வல்லாரில் மிக்கார் விளங்கும் பேரவை முன் தீர்க்ப்பட்டதைத் தொண்டர் புராணத்திலும், கணபதியின் தங்கை, தன் வழக்கை மதுரை அறத் தவசிஃனர்முன் உரையாடித் தீர்த்துக் கொண்டதைத் திருவிளையாடற் புராணத்திலும் காணலாம்.

அக்காலங்களில் வயதாலும் அனுபவத்தாலும் முதிர்ந்த பெரியவர்கள் சிலர் கூடிக் கொலைக்குற்றம் திருட்டுப் போன்ற குற்றம் முதலியவற்றிற்குரிய தண்டனைகளையும் வேறு வேறாக விதித்து வந்தனர்.