பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15



3. மாற்றிய பாட்டு

வெகு காலத்திற்கு முன் மதுரை என்ற நகரத்தில் பராக்கிரம பாண்டியன் என்பவன் ஆட்சி புரிந்து வந்தான். அவனிடம் அடிக்கடி தமிழ்ப் புலவர்கள் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அவனும் அந்தத் தமிழ்ப் புலவர்களிடமும் மிகவும் அன்பு கொண்டு உபசாரம் செய்வான், தமிழ் நாட்டுப் புலவர்களில், அவனிடம் சென்று பரிசு பெறாத புலவர்களே இல்லை என்று சொல்லி விடலாம்.

சார்வ பௌமர் என்ற புலவர் அந்த அரசனைப் பார்த்துப் பழகும் வாய்ப்புக் கிடைக்காமல் இருந்தார், அவர் பாண்டியனைக் காண வேண்டும் என்ற ஆவலோடு மதுரையை நோக்கிப் புறப்பட்டார். பல காலமாகப் பார்க்க வேண்டும், பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அவருடைய உள்ளத்தில் இருந்தமையால் அங்கே போனவுடன் அங்கே என்ன என்ன நடக்கும் என்று பலவாறாகக் கற்பனை செய்து பார்த்தார். பாண்டியன் ஓடி வந்து தம்மை வரவற்பான் என்றும், தம்முடைய கவிகளைக் கேட்டுப் பாராட்டி, பலவகைப் பரிசுகள் அளிப்பான் என்றும் அவர் கற்பனை பண்ணினார்.

சார்வ பௌமர் மதுரையை அடைந்தார். அப்போது பாண்டிய மன்னன் பிற நாட்டு