பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

உள்ள மூன்று இரத்தினங்களையும் எடுத்துக் கொண்டால் இரண்டு பேர்க்கும் சமமாகப் பங்கிட முடியாது என்று எண்ணி மாடசாமி ஓர் இரத்தினத்தை அங்கேயே வைத்து விட்டு, இரண்டை மாத்திரம் எடுத்துக் கொண்டு போனான்.



அவன் வாசலுக்கு வந்த பொழுது வாயில் காப்போர்கள் விழித்துக் கொண்டு அவனைப் பிடித்துக் கொண்டார்கள். அவனை அரசனிடம் அழைத்துக் கொண்டு போனார்கள். “அரண்மனையின் உள்ளே புகுந்து திருடினவன் இவன்” என்று காவல்காரர்கள் அரசனிடம் தெரிவித்-