42
கோபாலன் ஒரு பிரம்மச்சாரி அவனுக்குத் தாயுமில்லை; தந்தையுமில்லை; சகோதரர்களும் இல்லை. அவன் ஒரு தனிக்கட்டை அந்த ஊரிலுள்ள குடும்பங்களுக்குச் சென்று. அவர்களுக்கு வேண்டிய காய்கறிகளை வாங்கிக் : கொடுத்தல், கடையில் வேண்டிய சாமன்களை வாங்கித் தருதல், இன்னும் அவர்கள் இட்ட பணிகளைச் செய்து நிறைவேற்றுதல் ஆகிய காரியங்களைச் செய்து வந்தான் அதனால் அவர்கள் மகிழ்ந்து அவனுக்கு அவ்வப்போது சாப்பாடு போட்டார்கள். பல குடும்பங்கள் உள்ள ஊர் ஆகையால், ஒவ்வொரு வேளையும் வெவ்வேறு வீடுகளில் அவனுக்கு உணவு கிடைத்து வந்தது.
அவன் ஒரு சங்கீத வித்துவானிடம் பழகினான். அவருக்கு வேண்டிய வேலைகளைச் செய்தான். அதனால் அவர் மகிழ்ந்து அவனுக்குச் சங்கீதம் கற்றுக் கொடுத்தார். கோபாலன் நல்ல புத்திசாலி.. ஆகையால் சங்கீதத்தை நன்றாகக் கற்றுக் கொண்டான். பல கீர்த்தனைகளை மனப்பாடம் பண்ணினான். சிட்டா ஸ்வரம் பாடுதல், கல்பனா ஸ்வரப் பாடுதல் முதலியவற்றில் அவன் வல்லவனாகத் திகழ்ந்தான்.