பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்ணன் விரித்த வலை 151 மனிதனுடைய சிந்திக்கும் ஆற்றலைத் திசை திருப்பி, அர்ச்சுனனைப் போன்றவர்களைத் தலை யாட்டிப் பொம்மைகளாய் மாற்றித் தன்வயப் படுத்தி, கண்ணனைப் போல் உயர் நிலையில் கடவுள்களாய், விளங்குபவர்கள் மனித குலத்தின் மேம்பாட்டுக்கு முட்டுக் கட்டைகள் ஆவார்கள். இவர்கள், ஆண்டான் அடிமை என்ற வேறு பாட்டை நிலைநாட்டவே அன்று முதல் இன்று வரை தொடர்ந்து முயன்று, வெற்றி பெற்று மேனிலையில் இருந்து கொண்டிருக்கிறார்கள். உலகில் மிகப் பெரும்பாலான உயிர்க் கொலைகள் மிகப் பெரும்பாலான ஏமாற்று வேலைகள் மிகப் பெரும்பாலான பொருள் இழப்புகள் கடவுள் அல்லது கடவுள்களின் பெயராலேயே நடந்து வருகின்றன. இந்தப் பொல்லாங்குகளிலிருந்து மனிதன் விடுதலை பெறவேண்டுப். அதற்கு இந்த மாயைகளிலிருந்து மனிதன் விடுபடவேன்டும். அதற்குப் பகுத்தறிவு ஒன்றே சிறந்த வழி யாகும்!