பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

ஆடவர்களே இல்லாவிட்டால், பெண்கள் அனைவரும் கற்புடையவர்களே. - இந்தியா

ஏணியில்லாமலே தூக்கில் ஏற வேண்டுமானால், ஒரு பெண்ணின் உதவியால் முடியும். - இலங்கை

கோழிதான் சேவலைக் கூவச் சொல்லுகிறது. - ஜப்பான்

நாவுதான் பெண்ணுக்கு வாள், அது துருப்பிடிப்பதேயில்லை. -( ,, )

பெண் மனிதனின் குழப்பம். -லத்தீன்

பெண்புத்தி பின்புத்தி. - தமிழ் நாடு

வயதுவந்த பெண் (தீர்வை கட்டாமல்) கடத்தி வந்த உப்பைப் போன்றவள். -சீனா [விரைவிலே வெளியேற்ற வேண்டும்.]

பெண்ணின் உரோமத்தால் பெரிய யானையையும் கட்டிப் பிடிக்கலாம். -( ,, )

இளமங்கையை வீட்டில் புலிபோல் காத்துவர வேண்டும்.

-( ,, )

ஆடவர்கள் இதயங்களால் சிரிப்பார்கள், பெண்கள் உதடுகளால் மட்டும் சிரிப்பார்கள். -அரேபியா

பெண்பிள்ளை பயணம் போகிறாள் என்றால், ஓர் ஆண்பிள்ளை அவளுக்குக் கதவைத் திறப்பது தான் காரணம்.

-( ,, )

ஒரு நல்ல பெண் ஏழு பிள்ளைகளுக்கு மேல். - ஆர்மீனியா

உனக்கு ஓர் இரகசியம் தெரியவேண்டுமா? ஒரு குழந்தை, பயித்தியக்காரன், குடிகாரன், அல்லது ஒரு பெண்ணிடம் கேட்டுப் பார். -( ,, )

ஆணைவிடப் பெண்களுக்குப் பசி இரட்டிப்பு, புத்தி நான்கு மடங்கு, ஆசைகள் எட்டு மடங்கு அதிகம். -பர்மா

பெண்களை அழவிடுவதில் மனிதர்கள் கவனமா யிருக்க வேண்டும்; ஏனெனில் ஆண்டவன் அவர்களுடைய கண்ணீர்த் துளிகளை எண்ணிப் பார்க்கிறான். -யூதர்