பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

ஒவ்வோர் ஆதாமுக்கும் ஓர் ஏவாள் இருப்பாள். - போலந்து

ஒரு மதுக்கிண்ணமும் பெண்ணும் அருகிலிருந்தால், ஒருவனுக்குப் பொழுது போவது தெரியாது. -( ,,)

மூன்று சகோதரர்களில் இருவர் மூளையுள்ளவர், ஒருவன் விவாகமானவன். -( ,,)

ஒருவன் மணந்து கொள்வது நல்லதுதான், ஆனால் மணமில்லாதிருப்பது அதைவிட நல்லது. -போலந்து

திருமணம் செய்வதற்கு முன்பு மூன்று வருடம் இஷ்டம் போல் வாழ்க்கை நடத்திக்கொள். -( ,,)

பெண்பிள்ளை விவாகத்திற்கு முன்னால் அழுவாள் , ஆடவன் பின்னால் அழுவான். -( ,,)

கம்பளியை இரட்டையாக மடித்துப் போர்த்துக்கொண்டால், மேலும் குளிருக்கு அடக்கம்தான். -அயர்லந்து

[உறவினருக்குள் விவாகம் செய்து கொள்ளல் மிகவும் நல்லது]

முதல் ஆண்டு முத்தமிடும் ஆண்டு, இரண்டாம் ஆண்டு முட்டிப் பாயும் ஆண்டு. -அயர்லந்து

நீ உன் மனைவியை மணந்து கொள்ளும் போதே உன் குழந்தைகளையும் மணந்து கொண்டு விட்டாய். -( ,,)

(விவாகமானால், குழந்தைகளின் பாரத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.)
மனிதன் காதலிக்கும் பொழுது வசந்தம், கலியாண சமயத்தில் பனிக்காலம். -ஸ்காட்லந்து

பணத்திற்காகத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம்; பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும். -( ,,)

பானையாக உருண்டு சென்று மூடியை கண்டுபிடிக்கும்.

-பல்கேரியா

(திருமணத்திற்கு ஜோடி சேரும்.)

கல்யாணம் ஒரு நாள், இரு நாள்தான், அதன் பலனோ நெடுநாள் இருக்கும். - ஸெக்