55
தாய் எப்படி வளர்க்கிறாளோ, அப்படி உருவாகிறார்கள் மனிதர்கள். - இங்கிலாந்து
தாயாரின் செல்லப் பிள்ளைகள் வெண்ணை வெட்டும் வீரர்களாகவே வருவார்கள். - ( , , )
தழந்தையைப் பெற்றவளெல்லாம் தாயாகிவிட மாட்டாள். - ( , , )
தாயில்லாத வீடு வீடாகுமா? - ( , , )
நடனத்தின் இசை நடுவிலும், தாய்க்குத் தன் குழந்தை களின் அழுகுரலே கேட்கும். - ஜெர்மனி
தாய்ப் பாலுடன் பருகியது சாகும் வரை உடலில் இருக்கும்.
தாயிலே கெட்டவளுமில்லை, சாவிலே நல்லதுமில்லை.
உங்களுடைய தந்தையையும் தாயையும் கௌரவியுங்கள்.
என் மகனே, உன் தந்தையின் போதனையைக் கேட்டுக் கொள், உன் தாயின் சட்டத்தையும் புறக்கணிக்க வேண்டாம். - ( , , )
எந்தத் தாயரும் தந்தையரும் தங்கள் குழந்தைகளை விகாரமானவர்களாகக் கருதுவதில்லை. -ஸ்பெயின்
புத்திசாலியான மகனால் தந்தை மகிழ்ச்சியடைகிறான். ஆனால் மூட மகனால் தாயின் உள்ளம் வருந்துகின்றது.
தந்தையின் கடன்களை மகன் செலுத்துகிறான். -சீனா
தந்தையைக் குறை சொல்லும் பொழுது, மகன் தானே சிறுமையடைகிறான். - ( , , )
நல்ல கருவிலும் தீய பிள்ளைகள் உண்டாகி யிருக்கிறார்கள்.
ஒருவனுக்குக் கடவுள் சொந்தப் பிள்ளைகளைக் கொடுக்கா விட்டால், சயித்தான் அவனுக்கு அவனுடைய சகோதரர் பிள்ளைகளைக் கொடுக்கிறான். -ஸ்பெயின்