பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

வாலிபப் பருவத்தை அநுபவிக்க வேண்டும். -கிரீஸ்

அடங்காமல் துள்ளும் குட்டிகளே பின்னால்சிறந்த குதிரைகளாக ஆகின்றன. -( , , )

தெய்வங்களுக்குப் பிரீதியானவர்கள் இளமையிலே இறக்கிறார்கள். -( , , )

வாலிபம் துக்கத்துடன் தொடர்பு கொள்வதில்லை. - அரிஸ்டாட்டல்

குஞ்சுகளே வாத்துக்களைப் புல்வெளிக்கு அழைத்துச் செல்கின்றன. - இதாலி

வாலிபம் பறந்து செல்கின்றது. -லத்தீன்

காலை நேரம் இருக்கும் பொழுதே, மலர்களைப் பறியுங்கள்.

-( , , )

பெருமையுள்ள செயல்கள் அனைத்தும் அநேகமாக இளைஞர்களாலேயே செய்யப் பெற்றிருக்கின்றன. -டிஸ்ரேலி

இறைவன் (படைத்த) ஆட்டுக் குட்டிகள் துள்ளி விளையாடும். - இங்கிலாந்து

வாலிபத்தில் கவனமின்றித் துள்ளினால், வயது காலத்தில் வருந்தவேண்டும். -( , , )

இளமையைத்தான் அடக்கிக கொண்டு வரவேண்டும், முதுமை தானே தன்னை அடக்கிக் கொள்ளும். -( , , )

இளமையான தோள்களில் முதுமையான தலைகளை வைக்க முடியாது. -( , , )

வாலிபத்திலும் வெள்ளைத் தாளிலும் எதை எழுதினாலும் பதிந்து விடும். -( , , )

வாலிபம் நம்பிக்கைக் குரிய பருவம். -( , , )

வயோதிகர் குளிர்காய்ந்து கொண்டிருக்கையில், வாலிபர்கள் நடனமாடுவார்கள். -( , , )