66
வாலிபப் பருவத்தை அநுபவிக்க வேண்டும். -கிரீஸ்
அடங்காமல் துள்ளும் குட்டிகளே பின்னால்சிறந்த குதிரைகளாக ஆகின்றன. -( , , )
தெய்வங்களுக்குப் பிரீதியானவர்கள் இளமையிலே இறக்கிறார்கள். -( , , )
வாலிபம் துக்கத்துடன் தொடர்பு கொள்வதில்லை. - அரிஸ்டாட்டல்
குஞ்சுகளே வாத்துக்களைப் புல்வெளிக்கு அழைத்துச் செல்கின்றன. - இதாலி
வாலிபம் பறந்து செல்கின்றது. -லத்தீன்
காலை நேரம் இருக்கும் பொழுதே, மலர்களைப் பறியுங்கள்.
பெருமையுள்ள செயல்கள் அனைத்தும் அநேகமாக இளைஞர்களாலேயே செய்யப் பெற்றிருக்கின்றன. -டிஸ்ரேலி
இறைவன் (படைத்த) ஆட்டுக் குட்டிகள் துள்ளி விளையாடும். - இங்கிலாந்து
வாலிபத்தில் கவனமின்றித் துள்ளினால், வயது காலத்தில் வருந்தவேண்டும். -( , , )
இளமையைத்தான் அடக்கிக கொண்டு வரவேண்டும், முதுமை தானே தன்னை அடக்கிக் கொள்ளும். -( , , )
இளமையான தோள்களில் முதுமையான தலைகளை வைக்க முடியாது. -( , , )
வாலிபத்திலும் வெள்ளைத் தாளிலும் எதை எழுதினாலும் பதிந்து விடும். -( , , )
வாலிபம் நம்பிக்கைக் குரிய பருவம். -( , , )
வயோதிகர் குளிர்காய்ந்து கொண்டிருக்கையில், வாலிபர்கள் நடனமாடுவார்கள். -( , , )