பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

உணவு, அமைதி, முகமலர்ச்சி ஆகிய மூவருமே உலகில் தலைசிறந்த மருத்துவர்கள். - இங்கிலாந்து

தாகத்தோடு படுக்கச் செல்பவன் உடல் நலத்தோடு விழித்தெழுவான். -( , ,)

நல்ல மனைவியும் உடல் நலமும் மனிதனின் சிறந்த செல்வம்

-( , ,)

முன்னிரவில் தூங்கி, அதிகாலையில் எழுந்திருப்பவனுக்கு உடல் நலமும், செல்வமும் அறிவும் பெருகும். -( , ,)

வைத்தியர்களைவிட உணவுமுறை அதிகக் குணமுண்டாக்கும். -( , ,)

நீண்ட நாள் வாழ்வதற்குக் கதகதப்பான உடையணியவும் மிதமாக உண்ணவும், நிறைய நீர் பருகவும். -( , ,)

மதிய உணவுக்குப் பின் சிறிது நேரம் அமர்ந்திரு, இரவு உணவுக்குப்பின் ஒரு மைல் நட. -( , ,)

குளிர்ச்சியான தலையும், சூடான பாதங்களும் நீண்ட வாழ்வுக்கு உகந்தவை. -( , ,)

ஆரோக்கியமுள்ள உடல் ஆன்மாவுக்கு விருந்து மண்டபம்; நோயுள்ள உடல் அதன் சிறைக்கூடம். -பேக்கன்

நோய்

கோழிக்கு ஊசிப்புண் போதும். - இந்தியா

எப்பொழுதும் நோயுள்ளவனுக்குப் பெயர் ஆரோக்கியசாமி.

-( , ,)

முதல் சாமத்தில் எல்லோரும் விழித்திருப்பர், இரண்டாவதில் போகி விழித்திருப்பான். மூன்றாவதில் திருடன் விழித்திருப்பான், நான் காவதில் நோயாளி விழித்திருப்பான். -( , ,)

நோய் வந்து விட்டால் எந்த வைத்தியரையாவது அழை.

-சீனா