பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

வெளிச்சம் வருகிற சாளரத்தை அடைத்தல் வைத்தியர் வருவதற்குக் கதவைத் திறத்தலாகும். -( , ,)

வயிற்றுப் பக்கம் நோயில்லையானால் நோயாளி இறக்க மாட்டான். -( , ,)

கால் வலியை மறக்கலாம், தலைவலியை மறக்க முடியாது.

-ஆர்மீனியா

நோய் குணமாகாது என்று தெரிந்தால் இருக்கிற மருந்தை ஒருவன் வீணாக்கமாட்டான். -ஜெர்மனி

நோயே ஒரு வைத்தியன். -( , ,)

நோயைப் போற்றி வைப்பவனிடம் அது உறவு கொண்டாடும். -( , ,)

நோயாளியிடம் பணம் இருப்பதற்குத் தக்கபடி பிணி நீடிக்கும். -( , ,)

உடலுக்கு நோய் வந்தால், மனத்திற்கு வந்து விடும்.

-போஸ்னியா

நோயின் தந்தை எவனாயிருந்தாலும், தாய் உணவுக் கோளாறுதான். - இங்கிலாந்து

'ஆஸ்துமா' வந்தவர் நெடுநாள் வாழ்வர். -அயர்லந்து

முகத்தில் ஒரு பரு வந்து விட்டால் உடலுக்குள் சயித்தான் புகுந்த மாதிரி. -( , ,)

ஒவ்வொரு பிணியும் ஒரு வைத்தியன். -( , ,)

நீடித்த நோய்களுக்குப் பொறுமைதான் மருந்து. -( , ,)

வரட்சியான இருமல் வந்து விட்டால், எல்லா நோய்களும் தீர்ந்து விடும். - வேல்ஸ்

[மரணம்]

மூக்கின்மேல் பரு வந்தால் அது ஆளை மறைத்துவிட்டுத் தானே முன்னால் தெரியும். -பல்கேரியா

ஆரோக்கியத்தின் அருமையை நோயில்தான் அறியலாம்.

-ஹங்கேரி

ஈக்கும் இருமலுண்டு. - இதாலி