73
வெளிச்சம் வருகிற சாளரத்தை அடைத்தல் வைத்தியர் வருவதற்குக் கதவைத் திறத்தலாகும். -( , ,)
வயிற்றுப் பக்கம் நோயில்லையானால் நோயாளி இறக்க மாட்டான். -( , ,)
கால் வலியை மறக்கலாம், தலைவலியை மறக்க முடியாது.
நோய் குணமாகாது என்று தெரிந்தால் இருக்கிற மருந்தை ஒருவன் வீணாக்கமாட்டான். -ஜெர்மனி
நோயே ஒரு வைத்தியன். -( , ,)
நோயைப் போற்றி வைப்பவனிடம் அது உறவு கொண்டாடும். -( , ,)
நோயாளியிடம் பணம் இருப்பதற்குத் தக்கபடி பிணி நீடிக்கும். -( , ,)
உடலுக்கு நோய் வந்தால், மனத்திற்கு வந்து விடும்.
நோயின் தந்தை எவனாயிருந்தாலும், தாய் உணவுக் கோளாறுதான். - இங்கிலாந்து
'ஆஸ்துமா' வந்தவர் நெடுநாள் வாழ்வர். -அயர்லந்து
முகத்தில் ஒரு பரு வந்து விட்டால் உடலுக்குள் சயித்தான் புகுந்த மாதிரி. -( , ,)
ஒவ்வொரு பிணியும் ஒரு வைத்தியன். -( , ,)
நீடித்த நோய்களுக்குப் பொறுமைதான் மருந்து. -( , ,)
வரட்சியான இருமல் வந்து விட்டால், எல்லா நோய்களும் தீர்ந்து விடும். - வேல்ஸ்
- [மரணம்]
மூக்கின்மேல் பரு வந்தால் அது ஆளை மறைத்துவிட்டுத் தானே முன்னால் தெரியும். -பல்கேரியா
ஆரோக்கியத்தின் அருமையை நோயில்தான் அறியலாம்.
ஈக்கும் இருமலுண்டு. - இதாலி