பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

85


உலக அநுபவம்

வீடுதோறும் மண் அடுப்பு உண்டு. - இந்தியா

மனிதன் நனைந்தா லொழியக் குடிசை கட்ட மாட்டான்;

தலையில் தட்டி வீங்கினா லொழியக் குனிய மாட்டான்.

-( , , )

மரத்திலே பானை செய்தால், ஒரு முறை தான் சமைக்கலாம்

-( , , )

உலகம் யானைக்கே உதவி செய்யும், எறும்பை மிதித்து நசுக்கிவிடும். -( , , )

ஒவ்வொரு நிமிடமும் உலகை உற்றுப் பார்த்தால், எவர்களைப் பாராட்டுவது, எவர்களிடம் துக்கம் விசாரிப்பது? -( , , )

நீ ரோட்டியுடன் சர்க்கரை சேர்த்து உண்ண வேண்டுமானால் உலகைப் புகழ்ந்து பேசு. -( , , )

பாதிக் கோழியை கறிவைத்து, பாதியை முட்டையிட வைத்துக் கொள்ள முடியாது. -( , , )

நண்பனை வறுமையில் அறியலாம், வீரனைப் போரில் அறியலாம், யோக்கியனைக் கடனில் அறியலாம், மனைவியைச் செல்வமிழந்த நிலையில் அறியலாம், பந்துவை இடுக்கண் வருங்கால் அறியலாம். -( , , )

நாவிதரில் பழையவன், வண்ணாரில் புதியவன். -( , , )

பத்து மனிதர்-பத்து நிறம். - ஜப்பான்

மூடு பனியை விசிறியால் விரட்ட முடியாது. -( , , )

கற்கள் மிதக்கும் பொழுது, இலைகள் அழிந்துவிடும். -( , , )

திறமையுள்ள நீச்சல்காரர்கள் நீரிலே மடிவார்கள், திறமையுடன் சவாரி செய்பவர்கள் வேட்டையிலே மடிவார்கள் -ஜப்பான்

பத்து நாளில் சூடாக்கியது ஒரே நாளில் குளிர்ந்து விடும்.

-( , , )