பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

பண்டைக்காலம் முதல் மாறாமல் இருப்பவை: நீரின் ஓட்டமும் காதலின் போக்கும். -ஜப்பான்

ஆயிரம் உபதேசங்களைவிட ஓர் அநுபவம் பாடம் கற்பிக்கும். - துருக்கி

(கோவேறு) கழுதை மேலுள்ள பாரத்தில் சேணத்தைச் சேர்த்துக் கணக்கிடுவதில்லை. -( , , )

உலகிலே ஆதாயம், புகழ் என்ற இரண்டு பேர்கள் மட்டுமே ஓடிச் சாடித் திரிகிறார்கள். -சீனா

வீட்டுக்குள்ளே வண்டி செய்யலாம். ஆனால் அதைப் பாதையிலே தான் ஓட்டவேண்டும். -( , , )

உலகம் முழுவதும் காகம் கருமைதான். -( , , )

நாயின் வாயில் தந்தம் இராது. -( , , )

சேற்றில் ஓர் அடி வைப்பதை விட, பத்தடி சுற்றிச் செல்வது மேல். -( , , )

வல்லவர்களை அடக்க வல்லவர்கள் உண்டு; திறமைசாலிகளைத் தொடர்ந்து திறமைசாலிகள் வருவார்கள்.

-( , , )

வீட்டுக்கு வெளியிலே மனிதருக்கு மதிப்பு குறையும், சரக்குகளுக்கு மதிப்புக் கூடும். -( , , )

நீர் கப்பலைத் தாங்கும், அதுவே கப்பலைக் கவிழ்க்கவும் செய்யும். -( , , )

வண்டி வந்தால், வழி உண்டாகும். -( , , )

வழியை அடைத்து வேலி போட்டால், ஜனங்கள் அதில்

ஏறிக் குதிப்பார்கள், வழியை திறந்து வைத்தால், வேலியை உடைப்பதற்கு வேறிடம் பார்ப்பார்கள்.

சீனா

ஒட்டகத்தின் மேலிருப்பவன் திட்டங்கள் போடுகிறான், ஒட்டகத்திற்கும் திட்டங்கள் உண்டு. -அரேபியா

ஈச்ச மரத்திற்கு வேர் தண்ணீரிலும், உச்சி வெய்யிலிலும் இருக்க வேண்டும். -( , , )