90
வக்கீலிடம் பற்று அதிகமானால் செல்வம் குறைந்து விடும்; வைத்தியரிடம் பற்று அதிகமானால் ஆரோக்கியம் குறைந்துவிடும்; பாதிரியாரிடம் பற்று அதிகமானால் கௌரவம் குறைந்து விடும். -ஸ்பெயின்
வெய்யிலும், துக்கங்களும், விருந்துகளும் சவக்குழிகளை நிரப்புகின்றன. -( , , ) பலர் முகர்ந்த
ரோஜாவில் மணம் இராது. -( , , )
அநுபவத்தை ஆண்டுகளைக் கொண்டு கணக்கிட முடியாது, ஏனெனில் ஒரு மணி நேரத்தில் பல ஆண்டுகளைக் கடத்தி விடலாம். -ஸ்விட்சர்லந்து
ஒருவன் யாத்திரை போய்ப் போய்க் கடைசியில் தன் வீட்டுக்கே வருகிறான்; ஒருவன் வாழ்ந்து வாழ்ந்து கடைசியில் பூமிக்கே திரும்புகிறான். -ஆப்பிரிக்கா
எதிலும் அநுபவமில்லாதவர்களுக்கு அழுகுரலும் பாட்டாகத் தோன்றும். -( , , )
இந்த உலகத்தில் மூன்று நண்பர்கள் இருக்கிறார்கள்; தைரியம், புத்தி, நுண்ணறிவு. -ஆப்பிரிகா
உன்னை நேசிப்பவன் களைப்படையச் செய்கிறான், துவேஷிப்பவன் கொன்றுவிடுகிறான். -( , , )
நாவிதரில் பழையவன், வண்ணாரில் புதியவன். - இந்தியா
நீரிலே ஆழ்பவர்களைக் காட்டிலும் நிலத்திலே ஆழ்பவர்கள் அதிகம். - ரஷ்யா
உலகத்தோடு ஒழுகல்
மனிதர்களைச் சந்தித்தாலும், பேய்களைச் சந்தித்தாலும். அவர்கள் பேசுவது போலவே பேசவும். -சீனா
நீ விரும்பியதெல்லாம் உண்ணலாம், ஆனால் உடை மட்டும் மற்றவர்களைப் போலவே அணிந்து கொள்ள வேண்டும்.
நண்பகலில் அரசன் அது நிசி என்றால், நீயும் நட்சத்திரங்களைப் பார். -( , , )