பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

வக்கீலிடம் பற்று அதிகமானால் செல்வம் குறைந்து விடும்; வைத்தியரிடம் பற்று அதிகமானால் ஆரோக்கியம் குறைந்துவிடும்; பாதிரியாரிடம் பற்று அதிகமானால் கௌரவம் குறைந்து விடும். -ஸ்பெயின்

வெய்யிலும், துக்கங்களும், விருந்துகளும் சவக்குழிகளை நிரப்புகின்றன. -( , , ) பலர் முகர்ந்த

ரோஜாவில் மணம் இராது. -( , , )

அநுபவத்தை ஆண்டுகளைக் கொண்டு கணக்கிட முடியாது, ஏனெனில் ஒரு மணி நேரத்தில் பல ஆண்டுகளைக் கடத்தி விடலாம். -ஸ்விட்சர்லந்து

ஒருவன் யாத்திரை போய்ப் போய்க் கடைசியில் தன் வீட்டுக்கே வருகிறான்; ஒருவன் வாழ்ந்து வாழ்ந்து கடைசியில் பூமிக்கே திரும்புகிறான். -ஆப்பிரிக்கா

எதிலும் அநுபவமில்லாதவர்களுக்கு அழுகுரலும் பாட்டாகத் தோன்றும். -( , , )

இந்த உலகத்தில் மூன்று நண்பர்கள் இருக்கிறார்கள்; தைரியம், புத்தி, நுண்ணறிவு. -ஆப்பிரிகா

உன்னை நேசிப்பவன் களைப்படையச் செய்கிறான், துவேஷிப்பவன் கொன்றுவிடுகிறான். -( , , )

நாவிதரில் பழையவன், வண்ணாரில் புதியவன். - இந்தியா

நீரிலே ஆழ்பவர்களைக் காட்டிலும் நிலத்திலே ஆழ்பவர்கள் அதிகம். - ரஷ்யா

உலகத்தோடு ஒழுகல்

மனிதர்களைச் சந்தித்தாலும், பேய்களைச் சந்தித்தாலும். அவர்கள் பேசுவது போலவே பேசவும். -சீனா

நீ விரும்பியதெல்லாம் உண்ணலாம், ஆனால் உடை மட்டும் மற்றவர்களைப் போலவே அணிந்து கொள்ள வேண்டும்.

-அரேபியா

நண்பகலில் அரசன் அது நிசி என்றால், நீயும் நட்சத்திரங்களைப் பார். -( , , )