பக்கம்:குதிரைச் சவாரி.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்டு, அவர்கள் சந்தோஷப்படவில்லை; ஆச்சரியப்படவும் இல்லை; கலாட்டா செய்ய ஆரம்பித்தார்கள்: ‘ஆய், ஊய்’ என்று கத்தினர்கள்: கை தட்டினார்கள்; கற்களை எடுத்து, குதிரைகளின் மேல் எறிந்தார்கள்.

இந்த ‘ரகளை’யில் குதிரைகள் இரண்டும் வேகமாக ஒட ஆரம்பித்தன. ஒட, ஒட, அந்தத் துஷ்டப் பையன்களும் விடாமல் விரட்டலானார்கள். மோஹனும் மூச்சைப் பிடித்துக்கொண்டு, குதிரைகளைத் தொடர்ந்து ஒடினான்... ஆனாலும், அவனால் அதிக தூரம் ஓட முடியவில்லை: களைத்து விட்டான். கையிலிருந்த கடிவாளங்கள் நழுவி விட்டன: குதிரைகள் இரண்டும் அவனை விட்டு விட்டு