பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 191


"சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்"
(178)

என்ற வள்ளுவம் வழி உணரப் பெறுகிறது. திருவள்ளுவர் உறுப்புக்கள் அழித்தல், நாடு கடத்துதல், தூக்குத் தண்டனை முதலிய கொடிய தண்டனைகள் வழங்க உடன்படவில்லை என்பது பெறப்படுகிறது.

மனிதகுலம் பொருளியல் முயற்சியில் ஈடுபடவும் ஒழுக்க நெறியில் நிற்கவும் அறிய வேண்டும். வாழ்க்கையைச் செப்பமுற அமைக்கும் அடிப்படை மூலங்களில் கல்வியே தலையாயது. காலத்தினால் செய்த நன்றி என்று திருவள்ளுவர் குறிப்பிடுவது கல்விக் கொடையைத் தான் போலும். கல்வி மக்களின் அடிப்படை உரிமை. அதை வழங்குவது அரசின் தலையாய கடமை. பல்வேறு துறைகளில் சிறப்புற்றிருந்த பழந்தமிழகப் பேரரசுகள் மக்களின் அடிப்படைத் தேவையான கல்வியை வழங்குவதில் ஏன் போதிய ஆர்வம் காட்டவில்லை என்பது விளங்கிக்கொள்ள முடியாத, புரியாத புதிராக இருக்கிறது. சங்க காலத்தில் கல்வி கற்கும் முயற்சி மக்களின் . பாற்பட்டதாகத்தான் இருந்திருக்கிறது. பாண்டியன் அறிவுடைநம்பி பாடியதாக உள்ள புறநானூற்றுப் பாடல்,

"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை ::முனியாது கற்றல் நன்றே
பிறப்பு ஒரன்ன உடன்வயிற் றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும்மனந் திரியும்
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே"
(புறம் 173)