பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 219



குறட் செல்வம் திறனாய்வு


இன்பமே எந்நாளும் துன்பமில்லை


உயிரினம் அவாக்களால் உந்தப்பெற்று, விருப்பு வெறுப்புகளுக்குள்ளாவது இயற்கை. ஆசைகள் விருப்பு வெறுப்புகளின் தாய். விருப்பு வெறுப்புகள் வினைகளின் நிலைக்களன். வினைகள் இன்ப துன்பத்திற்குக் காரணம். இன்ப துன்பங்கள் பிறப்பிற்கு அடிப்படை பிறப்பு துன்பத்தோடு தொடர்புடையது. ஆனாலும், பிறப்பின் வழிப்பட்ட இவ் வாழ்க்கையின் இலட்சியம் பிறப்பிலிருந்தும், அவ்வழி வரும் துன்பத்திலிருந்தும் விடுதலை பெறுவது. ஒன்றின் இயல்பு ஒன்றாக இருக்குமானால் அதனோடு அதற்கு மாறுபட்ட இயல்பொன்றை முறையாகக் கூட்டு வித்தால் அவ்வியல்பு மாறும்-வளரும்.

உயிரின், மேற்கூறிய இயல்பை மாற்றி, அன்பின் வழிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட ஒரு துய்மையான நல்வாழ்க்கையைப் பெறச்செய்ய வேண்டுமானால் இயல்பிலேயே விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட கடவுளோடு-சிவ பரம்பொருளோடு இந்த உயிருக்குத் தொடர்பு ஏற்பட வேண்டும். அத்தொடர்பின் வழி, உயிர் மாட்டுள்ள குற்றங்கள் குறைந்து நிறைவு பெருகும். அவ்வழி உயிர்கட்கு எங்கும் எப்பொழுதும் இன்பமே கிடைக்கும். இக்குறிப்பினையே அப்பரடிகள் "இன்பமே எந்நாளும் துன்ப மில்லை" என்று குறிப்பிடுகின்றார். இக்கருத்தினையே