பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

284 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அப்படியில்லையேல், ஒருவரிடமுள்ள தீமை தணிவதில்லை. இந்தச் சிறந்த நோக்கந்தான் தன்னிடமுள்ள தீமையைத் தானே உணர்ந்து நொந்து வருந்தி அழுது பாடித் தீமையிலிருந்து விடுதலைபெறச் சான்றோர்கள் முயன்றிருக் கிறார்கள். இந்தச் சிறந்த நோக்கத்துடனேயே சமயங்களில் பிரார்த்தனையும், வழிபாட்டுமுறைகளும் தோன்றின. உண்மையான பிரார்த்தனை என்பது ஓருயிர் தன்னையே நோக்கித் தன் தீமையைக் கழுவுதலேயாம். ஆனால், மனிதனின் வியாபாரப் புத்தியும், சோம்பலும் இந்தத் தூய சமயத்தையும் விட்டபாடில்லை. இதன் விளைவாகவே புரோகித சமயம் தோன்றிற்று. ஒருவருக்காகப் பிறிதொருவர் அழத்தொடங்கி விட்டனர். பாபர் போல அழுதால் பயனிருக்கலாம். அது உண்மையிலேயே அழுதது. ஆனால், இவர்கள் அழுவதோ பெறக்கூடிய காசுகளுக்கேயாம். காலப் போக்கில் அழுவதுகூட விடுபட்டுப் போயிற்று. அவர்கள் சமயத்தின் முதலாளிகளாகி விட்டார்கள். முழுநிலவை மறைத்த நிழலைக் கருதி முதலைக் கண்ணீர் வடித்துக் குளத்தில் மூழ்கும் மனிதர்கள் - நிறைவுடைய நன்னெறியாம் சமயத்தில் படிந்த தீமையை நினைத்து அழாதது ஏனோ? ஒருவனிடமுள்ள தீமையை அவனே உணர்ந்துதான் மாற்றிக்கொள்ள முடியும். பிறர் அணைக்கும் தீயைவிடத் தம்மிடமே பொறுப்புள்ள தீமை கொஞ்சம் சிக்க லானதேயாம்.

அதோடு, தீ எரியத் தொடங்கியவுடனேயே வெளிப் படையாகத் தெரிகிறது. ஆதலால், உடனடியாக அணைக்கும் முயற்சியும் தோன்றிவிடுகிறது. ஆனால், தீமையோ உடனடி யாகத் தெரிவதில்லை. உடனிருந்தும் ஒட்டியும், பச்சை உறவு காட்டியும் இன்ப நயங்காட்டியும் பையப் பைய அரித்துக் கெடுப்பது. பலர், தன்னிடமுள்ள தீமையையேகூட அறியாமையின் காரணமாக நன்றென்றே கருதிக் கொண்டி ருக்கிறார்கள். அல்லது "அவரிடமில்லையா? இவரிட-