பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

324 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கொலைகாரர்கள் மிகுதியும் உள்ளனரோ என்ற வினா எழுந்தால் மறுப்பார் யார்?

இறப்பும் பிறப்பும்

னிதன் ஓயாது உழைக்கும் இயல்பினன். பகலெல்லாம் உழைக்கின்றான். உழைப்பில் முழு ஆர்வத்துடன் ஈடுபட்டால் ஓரளவே மனிதசக்தி செலவாகும். சூழ்நிலையின் காரணமாக விருப்பமின்றி உழைப்பில் ஈடுபட்டால் நிறைய மனித சக்தி வீணாகிறது. உழைப்பில் இழந்த மனித சக்தியை ஈடுசெய்ய மனிதன் உறங்குகின்றான். உறக்கம், அதியற்புத மான மருந்து உழைப்பில் இழந்த சக்தியை ஈட்டித் தருவதுடன் சோர்வை யகற்றிச் சுறுசுறுப்பைத் தருகிறது. மனிதன் உறங்கிய பிறகு எழுச்சியுடன் எழுந்திருக்கின்றான். இது இந்தப் பருவுடலைப் பொறுத்த நிகழ்ச்சி முறை.

அதுபோலத்தான் ஆன்மாவும் அதன் நுண்ணுடலும் இப்பிறப்பில் பல்வேறு வகையான வேதனைகளுக்கு ஆளாகிறது. அதில் உயிருக்கு அலுப்பும் சோர்வும் ஏற்படு கிறது. அதனாலேயே பிறப்பைத் துன்பமென வர்ணிக் கின்றனர். இந்த ஆன்ம நுண்ணுடல் சம்பந்தமான துன்பங்கள் நீங்கவே, மனிதனுக்கு இறப்பு வருகிறது. சிந்தனையிலும் உணர்விலும் கிழடுதட்டித் துன்பத்தில் உழன்று அழுது கொண்டே சாகும் மனிதன் திரும்பவும் கிழடு இல்லாத - இளமை நலங்கள் செறிந்த உடலுடன் தன்னுடைய ஆன்மப் பயணத்தின் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறான். ஆனாலும் முன்னைய அத்தியாயத்தின் துன்பச் சார்புகள் சூழ்நிலைக்கு அமுங்கிப் போகும். நினைவிற்கு வாரா முன்னைப் பயணத்தின் பயனாகப் பெற்ற அறிவும் பண்பும் மட்டும் கைகொடுக்கும். மீண்டும் வாழ்ந்து தன்னுடைய இலட்சியப் பயணத்தை அடைகின்றான். ஆதலால், ஒரு மனிதன் துன்பச் சூழலில் இறப்பது குறித்து