பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 331


என்ற குறள். ஆதலால் தெள்ளிய அறிவும் கண்டோரால் விரும்பப்படும் எளிமையும் ஏற்றப் பண்பும் ஒரு சேர உடையவராக வாழ்தல் அரிது.


மாணிக்கவாசகர் கடவுளைத் "திரு” என்றே அழைக்கிறார். "திருவே, என் செல்வமே" என்பது மணிமொழி. இறைவனை சிந்தித்தலுக்கும் அவன்றன் திருவருளைப் பெறுத லுக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை. தெள்ளிய அறிவுடையோர் இறைவனைப்பற்றியே ஆராய்ந்தாலும்கூட இறை வனை ஆராய்கிறார்களே தவிர அனுபவிப்பதில்லை. எந்த ஒன்றையும் எப்பொழுதும் ஆராய்ந்து கொண்டேயிருப்பவர்களுக்கு அவர்கள் ஆராயும் பொருளில் ஒன்றி உடனாகும் வாய்ப்புக் கிடைக்காது. இறைவனும் அவனது இன்பமும் ஆய்வுக் கூடத்திற்கு உரியனவல்ல. அனுபவத்திற்கு உரியன. தெள்ளிய அறிவுடையோர் ஆராய்கிறார்கள்! ஆராய்கிறார்கள்! ஆனால், ஐயகோ, அவர்களுக்கு அனுபவமில்லை! இதனைத்தானே "கற்றதனால் ஆயபயனென் கொல்?” என்று வள்ளுவர் வினவுகிறார். மாணிக்கவாசகரும் "கற்றாரையான் வேண்டேன்" என்று ஒதுக்குகிறார். திருஞான சம்பந்தரும் "தெளிவினுள் சிவமாகி" என்று குறிப்பிட்டுத் தெளிவு சிவமாதலிலேயே பயன் கூட்டுகிறது என்று அருளிச்செய்துள்ளார். ஆதலால், "திரு வேறு தெள்ளிய ராதலும் வேறு” என்ற குறளுக்குக் கண்டோரால் விரும்பப்படும் தன்மையுடையாராதலும், தெள்ளிய அறிவுடையாராதலும் உலகியற்கையில் வேறுபட்டன என்றும், இறைவன் திருவருளைச் சிந்தித்துப் பெற்று அனுபவித்தலும் தெள்ளிய அறிவும் உலகியற்கையில் வேறுபட்டன என்பதுமே சிறந்த கருத்துக்களாகும். இந்த இரண்டு உணர்வுகளும் அதாவது கண்டோரால் விரும்பப்படும் தன்மையும், இறைவன்றன் திருவருளைப் பெற்று அனுபவித்தலும் தன் முயற்சியினாலேயே ஆகக்கூடியனவாகும்.