இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
108
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
இறைவா, ஆகாயம் எவ்வளவு அற்புதமான பொருள்; ஒலி-ஒளி இரண்டையும் பிரதிபலித்துத் தரும் ஆற்றலுடையது ஆகாயம். இறைவா, என்னிடம் ஆகாயத்தின் ஆற்றல் இம்மியும் இல்லையே. யாதொன்றையும் பிரதிபலிக்கத் தெரிய வில்லையே. வெறும் பிண்டமாகக் காலம் கழிகிறது. இறைவா, ஐம்பூதங்களில் ஆகாயம் உயர்ந்து விளங்குவது போல் நான் விளங்க அருள் செய்க!
தூய்மை, பொதுமை, வாங்கும் சக்தி, உரிமைப்படுத்திக் கொள்ளத்துறவு, மண்ணகத்துயிர்களை ஓசையால், ஒலியால், உறவுகள் உண்டாக்கி இயக்கும்நிலை - இன்னோரன்ன இயல்புகள் வாழ்வியலுக்கு இன்றியமையாதன.
இறைவா, இந்த இயல்புகளை எனக்குத்தா! நான் மன்னுயிர்த் தொகுதிக்கெல்லாம் ஆதாரமாக வாழும் அருளைப் புரியாய்! நின் திருவருள் என்னை உயர்த்தாவிடில் வேறு எப்படி உயர்வது இறைவா? நின் கருணையைப் பொழி, ஆகாயம் அளவுக்கு உயர்த்து இறைவா!