திருவருட் சிந்தனை
135
ஏப்ரல் 28
|
என நீ உணர்த்திய நெறி நிற்பேன்.
இறைவா, எனக்குப் பொருள் தேவையா? பொருளின் பயன் தேவையா? அல்லது பொருளுக்கு நான் தேவையா? இறைவா, என்னால் பொருளுக்கு மதிப்பா? அல்லது பொருளால் எனக்கு மதிப்பா? இறைவா, இந்த வினாக்களுக்குச் சரியான விடையைச் சொல்.
இறைவா, எனக்கும் பொருளுக்கும் உள்ள உறவில் உள்ள அடிப்படை சரியாக இல்லையே. இறைவா, வழி காட்டு. பயன்பாட்டுக்குத்தான் பொருள். பயன்பாட்டுக்கு உரியதல்லாத பொருள் - பொருளே இல்லையல்லவா? இறைவா, நன்றாகச்சொன்னாய். என் புத்தியிலும் சற்றே உறைத்திருக்கிறது.
இறைவா, எனக்குத்தான் பொருள் தேவை; பொருளுக்காக நான் அல்ல. பொருளுக்கு மதிப்பு என்னால்தான். இன்றைய நடைமுறை அப்படி இல்லையே. சாமியார்களில் கூட, பணக்காரச் சாமியாருக்கு இருக்கிற மரியாதை, ஏழைச் சாமியார் ஞானியேயானாலும் இல்லையே.
என் வாழ்க்கைக்குத் துணைதான் பொருள். பொருளைப் பயன்படுத்தி நான் வளர வேண்டுமே தவிர, பொருள் ஆசை கூடாது என்று அருள் செய்.
இறைவா, என் வாழ்க்கையின் பண்பாட்டுத் தரத்தை உயர்த்த பொருள் துணை என்பதை அறிந்தேன். அப்பொருளை ஈட்டுவதற்குரிய செயற்பாடுகளும் என்னை வளர்க்கவேண்டும் என்பதை அறிந்தேன். இறைவா, இந்த அறிவை எனக்கு நிலையாகத் தா. என்னுடைய வாழ்நிலை தான் யாவற்றினும் உயர்ந்தது என்பதை உணர்த்திய இறைவா! நன்றி! நீ உணர்த்திய நெறியில் வாழும் உறுதியைத் தந்தருள் செய்க!