பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

346

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






நவம்பர் 25


இறைவா, என்னைப் புதிய மனிதனாக்குக!


இறைவா, என்ன சிரிக்கிறாய்! நான் நகைப்பிற்கிடமானவனாகி விட்டால் உனக்குப் பெருமையா? அது எப்படி இறைவா? ஏன் என்னை இப்படி அவலப்படுத்துகிறாய்? எனக்கென்ன வாய் இல்லையா? பேசத் தெரியாதா? தர்க்கம் செய்யத் தெரியாதா?

இறைவா, நான் பேசியே கெட்டேன். உலகத்தின் இயக்கம் செயலாலேதான்! என்னை ஆண்டருள் செய்யும் பெருமானே! என் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும், உறுப்பிற்குரிய உயர் பணிகளைச் செய்யத்தக்க வழியில் பயிற்சி கொடு.

என் கால்கள் நின் திருக்கோயில் வலம் வரட்டும்! என் கால்கள் வஞ்சிக்கப்பட்டு வாழ்விழந்தோர் வாழ்வு நோக்கி நடை பயிலட்டும். வயிறு, அற்புதமான உறுப்பு! ஓயாது உழைப்பது, உழைப்பின் பயனை உடல் முழுதுக்கும் தருவது, தூய்மை தழுவியது.

நெஞ்சு மனித நீதியில் நிவைத்து நிற்கட்டும். வாய் நின் புகழ் பேசட்டும். நின் புகழனைய வாய்மைக்கு வழக்காடட்டும். இறைவா, இந்தப்படி அருள் செய்! புதிய மனிதனாக்குக!

இறைவா, என்னைப் புதிய மனிதனாக்கி அருள்க! நெஞ்சம் நீதியில் நிலைத்திட அருள் செய்க!