திருவருட்சிந்தனை
375
இறைவா! துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். இது நின் அருள் வாக்கு! இறைவா, துன்பப்படுவதில் எனக்கு மறுப்பு இல்லை!
இறைவா, ஏசுபிரான் மற்றவர்கள் பாவத்தைக் கழுவ, சிலுவையில் துன்பப்பட்டார். அப்பரடிகள் நீற்றறையில் கிடத்தப்பட்டுத்துன்புற்றார்: திருஞானசம்பந்தர் தங்கியிருந்த இடம் தீயிடப் பெற்றுத் துன்புற்றார்.
உலக உயிர்களின் உய்திக்காகவும் உயர் நோக்கங்களுக் காகவும் விழுமிய துன்பங்களை அனுபவித்தால் அது பேறு; பாக்கியம் ஆகும்! இறைவா! எனக்கு இத்தகைய துன்பங்கள் யாதொன்றும் வரவில்லை!
உடற்பிணியால் துன்பம்! வறுமையால் துன்பம்: உட்பகையால் துன்பம்! இவையெல்லாம் விலைமதிப்பு மிகுதியுடைய வாழ்க்கையைக் கெடுக்கின்றன. இம்மையையும் கெடுக்கின்றன. ஏழேழ் பிறப்பையும் கெடுக்கின்றன!
இறைவா, நான் துன்புற்று உழலவே விரும்புகின்றேன்! அத்துன்பம் விழுமிய துன்பமாக இருக்க வேண்டும்! விண்ண கத்தைத் தரும் துன்பமாக இருத்தல் வேண்டும்! உயிர்க் குலத்தின் உய்திக்காகப்படும் துன்பம் இன்பமாக அமைதல் வேண்டும்!
இறைவா, வையகத்தின் துயர் நீங்க நான் துன்புறும் வாழ்க்கையை அருள் செய்க! வையகம் வளர, வாழ உழைத்திடும் துன்ப வாழ்க்கையே என் பேறு! அருள் செய்க!