பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

382

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





டிசம்பர் 31



இறைவா, ஞானப்பேரொளி வழங்கி அருள்க!

இறைவா, ஜோதியே! சுடரே! சூழொளி விளக்கே! நீ அருட்பெருஞ்ஜோதி! ஞானப்பேரொளி.! உன்னை அறிவால் அறிதல் இயலாது. பொருளால் அறிதல் இயலாது!

நாளும் புருவ நடுவில் ஒளிச்சுடர் ஏற்றிக் காணின் காணலாம்! உன்னைக் காண, அறிய, அனுபவிக்க ஆயிரம் ஆயிரம் சடங்குகள் செய்கின்றேன்! ஆயினும் நின்னைக் கண்டறிந்தேனில்லை.

இறைவா, நின்னைக் காண உள்ளத்தே நோக்க வேண்டும்! ஒருகணம் நோக்கினும் சாலும்! இறைவா, அது தானே இயல்வதில்லை! உன் ஞானத்தை அனுபவிக்க, கற்ற நூல், அறிவு, கை கொடுப்பதில்லை! நோன்புகளும் துணை செய்வதில்லை!

இறைவா, நீயே பற்றுக்கோடு என்ற தெளிவுமிக்க துணிவு தேவை! இறைவா, இந்த ஞானத்தைக் கொடு! ஒவ் வொன்றாக ஒழிந்து ஒடுங்கும் தவத்தினைத் தந்தருள் செய்க! உயிர்க்கு உயிராக விளங்கும் உன்னை ஒளி விளக்காகஅறியாமை இருளகற்றும் ஞான விளக்காக ஏற்றிப் போற்றிட அருள் செய்க!

ஞானத்தினை அருள் செய்க! ஞானத்திற்குரிய பர மோனத்தை அருள் செய்க! மோனத்தின் எல்லையில் ஆன்மாவின் பரபரப்பு அடங்கட்டும்! அறிவின் ஆர்ப் பாட்டங்கள் அடங்கட்டும்! செல்வத்தின் அகந்தைகள் அழியட்டும்! என் அகத்தே வளர்ந்துள்ள அகந்தைக் கிழங்கு அகழ்ந்தெடுக்கப்படட்டும்! இறைவா, அருள் செய்க!

ஒளி வழங்கி அருள்க! ஞானப் பேரொளி வழங்கி அருள்க! ஜோதியாக நின்று என் ஆணவக்காட்டை எரித்து அருள்செய்க! என் ஆன்மா, உடல் அனைத்தும் ஒளிமயமாகி, நின்றிட அருள் செய்க, சூழொளி விளக்காகி என்னைக் காட்டியருள்க! சுடரொளியாகி இந்த உலகைக் காட்டி அருள் செய்க. இறைவா ஞானப் பேரொளி வழங்கி ஆருள் செய்க!