பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



42

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஜனவரி 26


சிறியேன் செய்த பிழைகளைப் பொறுத்து ஆட்கொள்!

இறைவா, நினைந்து உருகும் அடியாரை ஆட் கொள்ளும் இறைவா! நினைப்பவர் மனம் கோயிலாகக் கொண்டருளும் என் தலைவா! நான் உன்னை நினைக் கிறேன், என்று கூறவும் வேண்டுமோ? இல்லை, இறைவா! நான் உன்னை நினைக்கவில்லை! நான் உன்னை மறந்திருந்தால்தானே நினைக்க வேண்டும்! தாயை மகவு மறந்த துண்டா? உடம்பை உயிர் மறந்ததுண்டா?

இறைவா, அதுபோல் நான் உன்னை மறந்ததே இல்லை! ஆதலால் நினைக்கவில்லை! நீ, என்னை நீங்காமல் இருந்து அருள் செய்கின்றனை! ஆனால் நினைப்பு பயன் தரவில்லை! இடையில் என் உழைப்பெல்லாம் வீணடிக்கப் பெறுகிறது. நில்லாதனவற்றையெல்லாம் நிலையாயின என்று கருதித் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன்! ஆனால், புறத்தே உன்னைத் தேடியதில் ஒன்றும் குறைவில்லை! நீ நிறைந்திருக்கும் என் உள்ளத்தே தேட மறந்தேன். என் இதயத்தை நான் உன்னிடம் பூரணமாக ஒப்படைக்கவில்லை! இறைவா, என்னைக் காப்பாற்று!

நின்னையே நினைந்து நினைந்து என் ஆவிகழியும் அருட்பெரும் வாழ்வினை அருள் செய்க! புறத்தே போகாமல் தடுத்தாட் கொள்! சிறியேன் செய்த பிழைகளைப் பொறுத்தாட் கொள்க!