இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
66
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
இறைவா! நீ அருளிச் செய்த நன்னெறிகளைப் பின்பற்றினாலும் துன்பம் வருகிறதே, ஏன் இறைவா? இறைவா, என்னை முழுமையான பக்குவமான ஆத்மாவாக வளர்க்கத் துன்பங்கள்தான் துணை செய்யுமா? நின் திருவுள்ளம் என்ன?
என்னை வளர்ப்பதற்கே துன்பங்கள் என்றால் நான் எப்படி மறுப்பேன்? நுகத்தடியில் கழுத்தினைத் தரும் மாட்டினைப்போல் நானும் துன்பங்களிடம் என்னை ஒப்படைக்கச் சித்தமாக உள்ளேன்! ஆனால், ஒரே ஒரு பிரார்த்தனை, நீ என் நெஞ்சத்தைவிட்டு அகலக்கூடாது.
துன்பத்தின் வாயில்தோறும் படிப்பினை கற்பேன், முழுநிறை மனிதனாவேன். என் வாழ்வின் எல்லையில் "இன்பமே எந்நாளும் துன்பமில்லை" என்று முழங்குவேன். இறைவா, அருள் செய்க!