பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

தவத்திரு குன்றக்குடி அடிகளார்




பிப்ரவரி 29


நீ எழுந்தருளும் திருக்கோயில்களைத் தூய்மையாக வைத்துக் கொள்வேன்!


இறைவா! உன்னுடைய அளவற்ற கருணையை அறிந்து போற்றக் கற்றுக் கொண்டேன் இல்லையே. நீ என் பொருட்டு எழுந்தருளியுள்ள திருக்கோயிலை நான் தூய்மையாக வைத்துக் கொள்வதில்லையே? ஏன், நீ என் பொருட்டு எழுந்தருளியுள்ள என் உடம்பையும் நான் துாய்மையாக வைத்துக்கொள்ளவில்லையே? என்ன பாபம் செய்தேன்?

இறைவா, மன்னித்துவிடு. இனிமேல் நீ எழுந்தருளும் திருக்கோயில்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ள முயற்சி செய்கிறேன்.